கிண்ணியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று மதியம் எடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் நான்கு புதிய தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவர்கள் கிண்ணியா மாஞ்சோலைச்சேனை, மையவாடிக்கு அருகில் வசித்து வருபவர்கள் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொடர்ந்தும் மக்களைச் சுகாதார திணைக்களம் விடுக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நடக்குமாறும் அவற்றைப் பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கிண்ணியா பிரதேசத்தில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.