தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய 4 பேர் முல்லைத்தீவில் கைது
முல்லைத்தீவில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி வீதியில் பயணித்த 4பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வற்றாப்பளை வீதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி இவர்கள் பயணித்த போதே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பிலிருந்து வற்றாப்பளை சென்ற இருவர் மற்றும் வற்றாப்பளையினை சேர்ந்த இருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களை பொலிஸ் பிணையில்
விடுவிக்கப்படவுள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.