ஈரானின் மற்றுமொரு கப்பல் 180 பணியாளர்களுடன் இந்தியாவில்..!
இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஐஆர்ஐஎஸ் தேனா சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்திய அதிகாரிகள் ஈரானிய கடற்படைக் கப்பலை கொச்சியில் நிறுத்த அனுமதித்ததாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்வதேச கடற்படை மதிப்பாய்வைத் தொடர்ந்து, கொச்சியில் இருந்தபோது, கப்பலில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதால், ஈரானியக் கப்பலான ஐரிஸ் லாவன் கொச்சியில் நிறுத்த அவசர அனுமதி கோரி கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அன்று ஈரான் இந்தியாவை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மார்ச் 1ஆம் திகதி ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கப்பல் மார்ச் 4 ஆம் திகதி கொச்சியில் நிறுத்தப்பட்ட பின்னர், அதன் 183 பணியாளர்கள் தற்போது இந்திய கடற்படை தளங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்பட்ட பதற்றநிலை
அண்மைய நாட்களில் இந்தியப் பெருங்கடலில் நடந்த நிகழ்வுகளுடன் தொடர்புடைய மூன்றாவது ஈரானிய கடற்படைக் கப்பலை இது உள்ளடக்கியிருப்பதால் இது கவனத்தை ஈர்த்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

மார்ச் 4 ஆம் திகதி, இந்தியாவில் கடற்படைப் பயிற்சிகளில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச நீரில், ஈரானிய போர்க்கப்பலான IRIS தேனா, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோவால் மூழ்கடிக்கப்பட்டது.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய அனுமதி கோரியது.
இலங்கை தனது பணியாளர்களை வெளியேற்றி, மனிதாபிமானக் கருத்தில் கொண்டு கப்பலை திருகோணமலைக்கு நகர்த்தியது.
ஐஆர்ஐஎஸ் தேனா அழிக்கப்பட்டதாலும், தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள ஐஆர்ஐஎஸ் புஷேர் மற்றும் இந்தியாவில் ஐஆர்ஐஎஸ் லாவன் நிறுத்தப்பட்டுள்ளதாலும், ஒரே பிராந்தியப் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இப்போது இந்தியப் பெருங்கடல் பகுதியில் தகவல்களை பேசுபொருளாக்கியுள்ளது.
அநுர தரப்பு உறுப்பினர்களின் வீடுகளில் பதுக்கப்பட்டுள்ள எரிபொருள் : கோட்டாபய காலத்தை நினைவுப்படுத்தி எச்சரிக்கை
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan