சஹ்ரானின் சகாவுக்கு 39 ஏக்கர் நிலம் - விசாரணை நடத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

Investigation Gotapaya Rajapaksa Srilanka Bomb Blast Jeyantha Weerasinge
By Steephen Oct 24, 2021 09:55 AM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குச் சொந்தமான புன்னக்குடா கடற்கரைக்கு அருகில் உள்ள 39 ஏக்கர் காணியை சஹ்ரான் அணியின் முக்கியஸ்தர் ஒருவரின் பெயருக்கு மாற்றியமை சம்பந்தமாக குற்றவியல் விசாரணை திணைக்களம் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு மழைக்காடுகளை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த விஜேசிங்க( Jayantha Weerasinghe), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்(Gotapaya Rajapaksa) கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

39 ஏக்கர் நிலம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி இலக்கம் 4551 என்ற காணி உறுதியின் மூலம் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அது மட்டக்களப்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காணியைச் சம்பந்தப்பட்ட நபர் 5 கோடி ரூபாய் கொடுத்து கொள்வனவு செய்துள்ளார். அந்த பணம் இந்த நபருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்குமாறு குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறும் விஜேசிங்க ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

குறித்த நபர் அந்த காணியைக் கொள்வனவு செய்த பின்னர், அதனை சஹ்ரான் குழுவினர் பயிற்சிகளைப் பெற வழங்கியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பாக சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்டதாக இந்த நபர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர் எனவும் ஜயந்த விஜேசிங்க கூறியுள்ளார்.

எனினும் அந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்படவில்லை. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னர், இந்த நபர் கைது செய்யப்பட்டு தற்போது வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் உட்பட அவரது அணியினர் முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது சகோதரருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனவும் காணியைக் கொள்வனவு செய்ய இவர்களின் பணம் கிடைத்ததா என்ற சந்தேகம் இருப்பதால், உரிய விசாரணைகளை நடத்துமாறு விஜேசிங்க தனது கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US