இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 38ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
இந்திய ஆக்கிரமிப்பு படையினால் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த பொழுது இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 50 பொது மக்களின் 38 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம்(24) யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து கல்லூரி வெளி வாசலில் இடம்பெற்றது.
இதனை கொக்குவில் படுகொலை நினைவேந்தர் குழு ஏற்பாடு செய்திருந்தது.
இந்திய இராணுவம்
பொதுசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் மற்றும் 22, 23,23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை, கொக்குவில் பிரம்படி கோண்டாவில், கொக்குவில் இந்து கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் இந்திய இராணுவம் பொதுமக்களை படுகொலை செய்திருந்தது.


