யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில்! மாவட்ட அரசாங்க அதிபர்
யாழில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யாழ். மாவட்டத்தில் இன்றுவரை 160 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த தொற்றாளர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் இன்றைய நிலையில் 1305 குடும்பங்களை சேர்ந்த 3736 நபர்கள், சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
யாழில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் வீடு திரும்பி உள்ளனர். யாழ். மாவட்ட மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் மேலும் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
மேலும் யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை திறப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஆராயும் குழு கூட்டத்தில் சந்தை விடயம் பற்றி ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri