செல் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
யாழ். - அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலானது நேற்று பிற்பகல் அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலமையில் இடம் பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட யாழ் மக்கள்
கடந்த 1987ம் ஆண்டு 05ம் மாதம் 29ம் திகதி அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் operation liparation
இராணுவ நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்து குறித்த பாதுகாப்பென நம்பி
தங்கியிருந்தவர்கள் மீதே அரச விமான குண்டுதாக்குதல் மற்றும் எறிகணை தாக்குதல்
மூலம் 18 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதில் முதல் நிகழ்வாக பொது சுடர் ஏற்றப்பட்டு பின்னர் மலர் அஞ்சலி, அகவணக்கம் என்பன இடம்பெற்றன.




பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam