35 ஆண்டு ஒப்பந்தப்படி சகல எண்ணெய் குதங்களும் இந்தியாவசம் - உதய கம்மன்பில
இலங்கை - இந்தியாவிற்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உடன்படிக்கையானது அடுத்த 35 ஆண்டுகளுக்கு, ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு ஏற்ப சகல எண்ணெய் குதங்களும் இந்தியா வசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2003 ஆம் ஆண்டு உடன்படிக்கைக்கு அமையச் சரித ரத்வத்தே திறைசேரி செயலாளராகவும், தகாம் விமலசேன பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவராகவும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஆகவே 2003 ஆம் ஆண்டிலிருந்து 35 ஆண்டுகள் ஒப்பந்தம் என்றால் 2038 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருக்கும், ஆனால் இந்தியா என்பது மாலைதீவு போன்ற சிறிய நாடு அல்ல.
ஆகவே இந்தியாவிடம் இருந்து இவற்றை மீண்டும் பெற்றுக்கொள்வது சாதாரண விடயம் அல்ல. ஆகவே அவர்களிடம் இருந்து உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்ள பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
