மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்தி : மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி முன்னிலை
மன்னார் கல்வி வலயத்தில் 35 மாணவர்கள் 9 ஏ சித்திளை பெற்றுள்ளதாகவும் அவற்றுள் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவிகள் முன்னிலை வகிப்பதாகவும் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நடைபெற்ற 2022 - 2023 ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 43 பாடசாலைகளில் இருந்து 1275 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் இவ்வாறு 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக மன்னார் வலயக்கல்வி அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
புனித சவேரியார் பெண்கள் கல்லூரி
அதனடிப்படையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் 13 மாணவிகள் 9 ஏ சித்திகளை பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் 04 மாணவர்களும், சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் 04 மாணவர்களும், வங்காலை சென் ஆனால் கல்லூரியில் 04 மாணவர்களும், முருங்கன் மத்திய கல்லூரியில் 03 மாணவர்களும் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.
அத்துடன் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் 02 மாணவர்களும் , அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, எருக்கலம் பிட்டி மகளிர் பாடசாலை, பேசாலை சென்.பற்றிமா மகா வித்தியாலயம் , மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் நானாட்டான் சிவராஜா இந்து பாடசாலை ஆகியவற்றில் தலா ஒரு மாணவர்களும், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
