முல்லைத்தீவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள முதியோர் ஓய்வகம்
முல்லைத்தீவு - உடையார் கட்டு வடக்கு பிரதேசத்தில் 35 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முதியோர் ஓய்வகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த திறப்பு விழா நிகழ்வானது இன்று (06.02.2024) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் முதியோர் ஓய்வகத்தை திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.
தேசிய செயலக நிதி அனுசரணை
முதியோருக்கான தேசிய செயலக நிதி அனுசரணையில் மாவட்ட செயலம் ஊடாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் முதியோர் ஓய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
உடையார் கட்டு வடக்கு கிராமஅபிவிருத்தி சங்க தலைவர் பாலகிருஸ்னன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந்தன்,புதுக்குடியிருப் பிரதேச சமூக சேவைகள் உத்தியோகத்தர் ச.சதாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்,கிராம மட்ட அமைப்புக்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
