மொனராகலை பேருந்து விபத்தில் மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயம்
மொனராகலை - சியம்பலாண்டுவ புத்தமபகுதியில் இருந்து மொனராகலை நோக்கி பிரயாணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியது.
குறித்த சம்பவம் இன்று (29.02.2024) காலை 7.10 மணியளவில் இடம்பெற்றது.
பேருந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 34 பேர் காயமடைந்த நிலையில் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், மொனராகலை நோக்கி பிரயாணித்த குறித்த பேருந்தில் சுமார் 45 பாடசாலை மாணவர்கள் உட்பட 80 பேர் பயணித்துள்ள நிலையில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மேலும், இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 34 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
