பாடசாலையில் அசௌகரியத்தை ஏற்படுத்திய காணொளி பதிவு: கல்வி அமைச்சு நடவடிக்கை
பாடசாலை ஒன்றில் மாணவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் காணொளி பதிவு செய்த நபருக்கு எதிராக கல்வி அமைச்சு உரிய ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த காணொளியானது சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அதில் ஒரு மாணவனின் கேள்வியும் அந்த மாணவனின் சங்கடமான பதிலளிக்கும் முறையும் பதிவாகியுள்ளது.
நடவடிக்கை
இந்த நிலையில் சம்பவத்தை பதிவு செய்த நபரை அடையாளம் காண விசாரணை நடத்தப்படும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சம்பவத்தில் ஆசிரியர்களும் உடன்பட்டிருப்பது உறுதியானால், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |