உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட பாதாள உலக தொடர்பாளர்கள்
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கூற்றுப்படி, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் பாதாள உலக நடவடிக்கைகள் அல்லது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட முப்பத்து நான்கு பேர் போட்டியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது பாதுகாவலர் விஜேபால நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர்,
பாதாள உலகக் கும்பல்
விசாரணைகளில் பல பாதாள உலகக் கும்பல்களுக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஒன்பது வேட்பாளர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) எட்டு வேட்பாளர்களும், ஜனநாயக மக்கள் கூட்டணியின் நான்கு வேட்பாளர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மூன்று வேட்பாளர்களும், மற்றும் சர்வஜன அதிகாரம் கட்சியில் ஒருவரும் காணப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 10 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri
