இலஞ்சம் பெற்ற பொது மக்கள் உட்பட 34 பேர் கைது
கடந்த 6 மாதங்களில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜுன் மாதம் 30 வரை 3,022 முறைப்பாடுகள் பெறப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில், 54 சோதனைகள் நடத்தப்பட்டு 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களில் 10 பொலிஸ் அதிகாரிகள், நீதி அமைச்சின் 5 அதிகாரிகள், சுகாதார அமைச்சின் 2 அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் 2 அதிகாரிகள் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஆணைக்குழு
கூடுதலாக, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் தொடர்பாக 6 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில், இலஞ்சம் தொடர்பான சம்பவங்கள் தொடர்பாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டு
குறித்த காலகட்டத்தில் 6 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இலஞ்சம் தொடர்பான 273 வழக்குகள் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஆண்டில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        