வருடம் தோறும் 3200 பேர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர்:தேசிய மனநல சுகாதார நிறுவனம்
இலங்கையில் வருடம் தோறும் சுமார் 3 ஆயிரத்து 200 பேர் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைமை காணப்படுவதாக தேசிய மனநல சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகில் தற்கொலை செய்துக்கொள்வதை தடுக்கும் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டதுடன் செயல் மூலம் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவது என்ற தலைப்பில் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
உலகில் ஆசிய பிராந்தியத்திலேயே அதிகவில் தற்கொலைகள்
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை தொனிப்பொருளின் கீழ் இந்த தினம் அனுஷ்டிக்கப்படும். தற்கொலைக்கு பதிலாக மாற்று வழி இருக்கின்றது என்பதை நினைவூட்டுவதே இதன் நோக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.
உலகில் வருடந்தோறும் சுமார் 7 லட்சத்து 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். மேலும் பலர் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
உலகில் தற்கொலை செய்துக்கொள்வோரின் அதிகமான சதவீதம் ஆசிய பிராந்தியத்திலேயே பதிவாகி வருவதாக தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் மருத்துவர் அரோஷ விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
