மன்னார் மாவட்டத்தில் 18 நாட்களில் 300 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
மன்னார் மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் 300 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை (19) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையான நாட்களில் 300 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று புதன் கிழமை 11 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 13 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த வருடம் 1324 கோவிட் தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை மொத்தமாக 1341 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் சுகாதார நடை முறைகளைப் பின்பற்றிக்கொள்ள வேண்டும்.
குணம் குறிகள் எதுவும் காணப்பட்டால் அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று தங்களைப் பரிசோதித்துக் கொள்வதற்கான வசதிகள் மன்னார் வைத்தியசாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது கோவிட் தொற்றாளர்கள் போதுமான அளவு இடவசதி உள்ள காரணத்தினால் வீடுகளில் தங்க வைத்து சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றமையினால் மக்கள் தமக்கு எதுவும் குணம் குறிகள் காணப்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி சுகாதார வைத்திய அதிகாரி அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையினையோ நாட முடியும்.
தற்போதைய சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக எவ்வித ஒன்றுகூடலையும் நடத்த முடியாது என்பதால் மக்கள் ஒன்று கூடலினை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பொலிஸார் அல்லது சுகாதாரத் துறையினருக்குத் தெரியாமல் இரகசியமாக ஒன்று கூடுவதையும், நிகழ்வுகளை நடத்துவதையும் தவிர்த்துக் கொள்வது நல்லது.
பைஸர் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பு ஊசியை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் நாளை (20) மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 2 ஆவது தடுப்பு ஊசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
