இலங்கை பொலிஸாரின் அடக்குமுறை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்

Sri Lankan protests SL Protest Sri Lanka Government
By Sivaa Mayuri Apr 10, 2024 08:56 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

போராட்டங்களை வன்முறையால் ஒடுக்கும் இலங்கையின் சட்ட அமுலாக்க அதிகாரிகள் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவிற்கான (South Asia) இயக்குநர் ஸ்மிருதி சிங் (Smriti Singh) கண்டனம் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மன்னிப்புச் சபை வெளியி்ட்டுள்ள 'எந்த எதிர்ப்பையும் அடக்கத் தயார்' என்ற வகையிலான புதிய ஆய்வு அறிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், " கடந்த 2022 மார்ச் மற்றும் 2023 ஜூன் வரை, இலங்கையில் சுமார் 30 போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்! வெடித்தது புதிய சர்ச்சை

பொலிஸாரின் நடவடிக்கை 

இவற்றின் போது, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு குறித்து இந்த அறிக்கை ஆய்வு செய்துள்ளது.

30-protests-in-sri-lanka-in-a-year

சட்டவிரோதமான முறையில் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை மற்றும் தடியடிகளை தவறாகப் பயன்படுத்திய இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தொடர்பில், குறைந்தது 17 போராட்டங்களின் காணொளிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அவற்றில் அதிகாரிகள் தமது சக்தியைப் பயன்படுத்துவதற்கான தரநிலைகள் மற்றும் நடத்தைகளை சர்வதேசத்துடன் ஒப்பிடுகையில் அவை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. 

இலங்கை பொலிஸார் 2022 - 23ஆம் ஆண்டுகளில் இருந்தே, போராட்டங்களை சட்டவிரோதமானவை மற்றும் வன்முறையானவை என்றும், அவற்றை அடக்குவதற்கு பலத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கருதி செயற்பட்டு வருகின்றனர்.

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்பதையும், போராட்டங்களை எளிதாக்குவதும் பாதுகாப்பதும் அதிகாரிகளின் கடமை என்பதையும் பொலிஸார் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.மேலும், அவர்கள் பெரும்பாலும் அமைதியான எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து, துரத்தினார்கள், அடித்தார்கள்.

கிழக்கு ஆளுநரின் ரமழான் நோன்பு வாழ்த்து செய்தி

கிழக்கு ஆளுநரின் ரமழான் நோன்பு வாழ்த்து செய்தி

சர்வதேச மன்னிப்பு சபை 

இந்தநிலையில், 2022 காலிமுகத்திடல் போராட்டம் முதல் இன்றுவரை தொடரும் பெரும்பாலான அமைதியான போராட்டங்களுக்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பாக சக்தியை, பொலிஸார் பயன்படுத்துவதை சர்வதேச மன்னிப்புச் சபை ஆவணப்படுத்தியுள்ளது.

30-protests-in-sri-lanka-in-a-year

அது மாத்திரமன்றி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அமைதியான போராட்டங்களுக்கு பாதுகாப்பு படையினரும், புலனாய்வு அமைப்புகளும் கண்காணிப்பு, அச்சுறுத்தல், துன்புறுத்தல் மற்றும் இடையூறுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.

சர்வதேச மன்னிப்புச் சபை தனது விசாரணையின் போது, கொழும்பு, பத்தரமுல்ல, களனி, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய இடங்களில் இருந்து 30 போராட்டங்களின் 95 சரிபார்க்கப்பட்ட காணொளிகளில் 39 தொடர்பில் திறந்த மூல விசாரணையையும் நடத்தியது.

இதனையடுத்து மார்ச் 2024 இல், சர்வதேச மன்னிப்புச் சபை, இந்த குற்றச்சாட்டுகளை கோடிட்டுக் காட்டி உத்தியோகபூர்வ பதிலைக் கோரி இலங்கை பொலிஸாருக்கு கடிதம் எழுதியது, ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என்றும் மன்னிப்பு சபை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது" என சுட்டிக்காட்டியுள்ளார். 

நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் தாமதிக்கும் பொலிஸார்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US