சட்டவிரோதமான முறையில் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிப்பு
எந்தவித ஆவணங்களும் இல்லாமல் 30 கைதிகள் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு ஏற்கனவே விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள்
இது தொடர்பாக, சிறைச்சாலைகள் ஆணையர் ஜெனரல் துஷார உப்புல்தெனியவும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட குழு பல்வேறு பிரிவுகளின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர்
மேலும் அவர்கள் எந்த அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதையும் விசாரித்து வருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி மன்னிப்பை வழங்கிய 37 நபர்கள் விடுவிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.





நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
