கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று பேர் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த 3 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுங்கத்தை சேர்ந்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவால் செய்யப்பட்டது.
போதைப்பொருள்
இலங்கைப் பிரஜைகளான 3 சந்தேக நபர்களும், தங்கள் பைகளில் போதைப்பொருட்களை கவனமாக மறைத்து பேங்கொக்கிலிருந்து நாட்டிற்கு கொண்டு வந்திருந்தனர்.
அவர்களின் பொதிகளில் 1,616 கிராம் குஷ் மற்றும் 1,762 கிராம் ஹஷிஷ் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலதிக விசாரணை
இந்த போதைப்பொருட்களின் மதிப்பு 45 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்று சந்தேக நபர்களில் இருவர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்கள், மற்றைய சந்தேக நபர் பதுளை பகுதியைச் சேர்ந்தவராகும்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
