வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வளையங்கள்
வட மாகாணத்தில் 3 இடங்களில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வளையங்கள் அமையவுள்ளது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
நேற்று(12) வணிகர் கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“காங்கேசன்துறை சீமெந்து தொழிற்காலை அமைந்துள்ள வளாகம், பரந்தன் இரசாய தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம், இந்த 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்கள் அமையவுள்ளது.
இங்கு பல தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் நீர் வழங்கல். மின்சாரம், வீதி புனரமைப்பு என்பன ஒழுங்கு செய்து தரப்படும்.
30 வருட குத்தகைக்கு இந்த இடம் வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam