யாழில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்
யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் யாழ்ப்பாணத்தில் தமிழில் உரையாற்றியுள்ளார்.
சித்தன்கேணியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
விஜித ஹேரத்
நான் தமிழில் பேச விரும்புகின்றேன்.ஆனால் சிறிதளவுதான் தமிழ் தெரியும் என்றார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தன் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.
ஒரு தாய் மக்கள்
நாங்கள் இன,மொழி ,மத, சாதி பேதம் இல்லாதவர்கள். நாங்கள் எல்லோரும் ஐக்கியப்பட வேண்டும். நாங்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள், நாங்கள் சந்தர்ப்பவாதியில்லை” என்றார்.

இந்நிகழ்வில் வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ,கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான கணநாதன் இளங்குமரன் ,ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் ,எஸ்.ஸ்ரீபவானந்தராஜா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri