கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களும் இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
மோசமான வானிலை
டோக்கியோவில் இருந்து UL 455 மற்றும் மாலேயில் இருந்து EK 652 ஆகிய இரண்டு விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன.

மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம்
மூன்றாவது விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதில் ஆபத்தான நிலைமை காணப்பட்டமையால், மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

மாலேயில் இருந்து வந்த UL121 விமானம் ஒன்றே இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நாடாளவிய ரீதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri