கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களும் இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
மோசமான வானிலை
டோக்கியோவில் இருந்து UL 455 மற்றும் மாலேயில் இருந்து EK 652 ஆகிய இரண்டு விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன.

மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம்
மூன்றாவது விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதில் ஆபத்தான நிலைமை காணப்பட்டமையால், மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

மாலேயில் இருந்து வந்த UL121 விமானம் ஒன்றே இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நாடாளவிய ரீதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan