யாழில் விசேட தேவையுடைய யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய மூவர் கைது
யாழில் விசேட தேவையுடைய 18 வயது யுவதியை தகாத முறைக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் அவரின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு உடல் நிலை சரியில்லாததன் காரணமாக கடந்த 14ஆம் திகதி அவருடைய தாய் அவரைப் பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பொலிஸ் விசாரணை
அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார். பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடைய சகோதரியின் கணவரும் (சிறிய தந்தை) இன்னும் இருவரும் இணைந்து, அந்த யுவதியைத் தொடர்ச்சியாக தகாத முறைக்கு உட்படுத்தி வந்தனர் என்று பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் சிறிய தந்தையான 46 வயதுடைய நபரையும், 28 வயதுடைய மற்றைய இருவரையும் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri