இத்தாலியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - இலங்கை இளைஞன் அதிரடியாக கைது
இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேப்பிள்ஸ் நகரில் உள்ள Piazza Garibaldi சுரங்கப்பாதை நிலையத்தின் இரண்டாவது வழித்தடத்தில் பெண்ணொருவர் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், இலங்கையரின் தாக்குதல் முயற்சியிலிருந்து தப்பித்து விரைந்து சென்று ரயில்வே பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இளைஞன் கைது
பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 29 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேப்பிள்ஸ் மத்திய ரயில் நிலையம் மற்றும் Piazza Garibaldi பகுதிகளில் கொள்ளை, திருட்டு மற்றும் பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan