தேவாலயத்துக்குள் நுழைந்த கொள்ளை கும்பலால் நெரிசலில் சிக்கி 29 பேர் பலி (VIDEO)
தேவாலயத்திற்குள் கொள்ளைக்கும்பல் புகுந்ததைப் பார்த்த மக்கள் தப்பிக்க ஓடியதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மன்ரோவியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புதன்கிழமை இரவு ஜெபக்கூட்டம் நடந்துகொண்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆயுதங்களுடன் ஒரு கும்பல் ஒன்று கொள்ளையடிப்பதற்காக தேவாலயத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது தேவாலயத்தில் இருந்த மக்கள் தப்பிக்க ஓடியுள்ளனர்.இதனால் அங்கு கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் பலர் கீழே விழுந்துள்ளனர். அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி மிதித்தபடி வெளியேறியுள்ளனர். இந்த கூட்டநெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
இது தொடர்பான மேலும் பல உலக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது உலக செய்திகளின் தொகுப்பு,