பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா
தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் மற்றும் பிரான்ஸ் இணைந்து நடத்திய 27ஆவது தமிழர் விளையாட்டு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்வு கடந்த 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை L’Aire des Vents Dugny திடலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எமது தமிழ்வின், லங்காசிறி, மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்களின் அனுசரணையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கடும் வெப்பத்திற்கு மத்தியில் நடந்த விளையாட்டு விழா
இயற்கையின் கடினமான காலநிலையினால் இந்நிகழ்வு நடப்பதற்கு சாத்தியமில்லை என இருந்த போதிலும், இடைநிறுத்தாமல் அனுமதி தந்த 93 பிராந்திய பொலிஸ் தலைமையகம், மாகாண அவைத் தலைவர் Stéphane Troussel மற்றும் திடலின் உரித்துடைய நகமன்றங்களுக்கும் ஏற்பாட்டாளர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காலை 10.30 மணியளவில் இசைப்பிரியா முழங்குவாத்திய (band) அணி இசை அணியுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிரதான பொதுச் சுடரினை த. பு. க உபதலைவர் மு. ரவிக்காந் ஏற்றி வைத்தார், தமிழீழத் தேசியக்கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் சி. மகிந்தன் ஏற்றி வைத்தார். அதன்பின்னர், தாயக விடுதலைக்காப் போராடி வீர மரணத்தை தழுவிய மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், நினைவுகூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.
திடலில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நினைவுச்சுடரினை த. பு. க. உறுப்பினர் ஆ. அரியராசா ஏற்றிவைக்க, வருகை தந்த அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர் பாரம்பரிய இண்னியம் இசை நடனத்துடன் நகரபிதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், வர்த்தகர்கள், தொண்டர்கள், கலைஞர்கள், சமூக ஊடகத்தினர், மக்கள் அனைவரும் திடலின் மத்தியில் நாட்டப்பட்ட கொடிக்கம் வரை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
10 ஆயிரம் மக்கள் பங்கேற்பு
பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியினை ஸ்டீபன் துர்சல்லும், ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை அலன் ஆனந்தனும், த. பு. க. கொடியினை த. பு .க. பிரான்ஸ் உறுப்பினர் த. செல்வரஞ்சனும் ஏற்றிவைத்தனர்.
மங்கள விளக்கினை கலந்துகொண்ட பிரமுகர்கள், வர்த்தக உரிமையாளர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்றி வைத்துள்ளனர்.

வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் இரு இசை இளம் அணி இசைக்கலைஞர்களும் நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் இதன்போது மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் ஆரம்பமாகி ஒதுக்கப்பட்ட குடில்களில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
அதன்பின்னர், சிறப்பு விருந்தினர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறைசார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.
கல்யாணி உணவகம் மற்றும் சோழன் உணவகம் நிறுவப்பட்டு, சோழன் பல்பொருள் அங்காடியின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிர்ஷ்டலாப சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது.

நல்வாய்ப்பில் புதிய மகிழுந்திற்கு குலுக்கல் முறையில் 1902 என்ற இலக்கம் தெரிவானதுடன், 100 ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பரிசில்களை சோழன் பல்பொருள் வாணிபம் வழங்கியுள்ளனர்.
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் திரளுடன் இரவு 9.30 மணிவரை இடம்பெற்ற நிகழ்வு கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.
தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகள், தன்னார்வத் தொண்டர்கள், குடும்பத்தினர்கள், தேசியக் கட்டமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடகங்கள், சமூக வலை ஒளி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.



மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam