வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது
வவுனியாவில்(Vavuniya) ஹெரோயின் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது இன்று (04.06.2024) இடம்பெற்றுள்ளது.
விசேட சோதனை நடவடிக்கை
வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட யுவதியை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |