இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் நிபந்தனையுடன் விடுதலை
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் வைத்து கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 10ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
குறித்த 23 பேரும் இன்று (03.12.2024) யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர்.
அபராத தொகை
வழக்கினை ஆராய்ந்த நீதவான் இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன், குறித்த 23 பேரில் 3 பேர் படகோட்டிகள் என்பதால் அவர்களுக்கு தலா 4 மில்லியன் அபராத தொகையினை செலுத்தும் அதேவேளை, 6 மாத சிறைத்தண்டனையும் மேலதிகமாக வழங்கி உத்தரவிட்டார்.

அபராத தொகை செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 3 மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri