யதார்த்தத்துக்கு புறம்பான 22ஆவது அரசியலமைப்பு திருத்தம்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை¸ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது யதார்த்தத்திற்குப் புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனை குறித்து ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதுடன், நிலையியற் கட்டளையின் அடிப்படையில் முதல் வாசிப்புக்கான சட்டமூலம் ஒன்று, சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசியலமைப்பின் கீழ் ஒரு சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டால், உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பின்னர் அத்தகைய சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்கு நிர்ணயிக்கப்படும்.
திருத்தப்பட்ட சொல்
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனையானது, அரசியலமைப்பின் 83 (பி) பிரிவை திருத்துவதற்கான நோக்கில் உள்ளது.
இதன்படி, அரசியலமைப்பின் 83 (பி) பிரிவின் "ஆறு ஆண்டுகளுக்கு மேல்" என்ற சொல்லுக்கு மாற்றாக "ஐந்தாண்டுகளுக்கு மேல்" என்ற சொல் பயன்படுத்தப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, 19ஆவது திருத்தத்தின்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், பொது வாக்கெடுப்பு தொடர்பான அரசியலமைப்பு விதியில், அது ஆறு ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம்
எனவே, அரசாங்கம், புதிய யோசனையை நடைமுறைக்கு கொண்டு வருவதில், ஐந்தாண்டு காலத்தை பிரதிபலிக்கும் வகையில் திருத்தம் செய்ய முயல்கிறது.
இந்த யோசனையை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு கூடுதலாக மக்கள் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனினும், அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கை மறுக்க எதிர்க்கட்சிகள் இப்போது தயாராகி வருகின்றன.
இந்தச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் பட்சத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வஜன வாக்கெடுப்பு
இந்த நேரத்தில் இந்த சட்டமூலத்தை கொண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது வாக்காளர்களை குழப்புவதாகவும், ஜனாதிபதி தேர்தல் நடைமுறையை சிக்கலாக்குவதாகவும் உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், குறித்த யோசனைக்கு சபையில் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் கிடைத்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இதன்போது, திகதியை முடிவு செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு என்ற அடிப்படையில், ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு தினத்துடன் முரண்படும் திகதி ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிர்ணயிக்க முடியும் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 16 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
