பலத்த பாதுகாப்புடன் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள 21 பாதாள உலக உறுப்பினர்கள்
டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக கூறப்படும் 21 பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்
நிலவும் மோசமான வானிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

குறித்த விமானங்களில் சிலவற்றிலேயே இந்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹவத்தே சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக வெளியேறுங்கள் - பல மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
you may like this