ரணில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணட்டும் பிறகு திருத்தச் சட்டங்கள் பற்றி பேசலாம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Podujana Peramuna Sri Lankan political crisis Sagara Kariyawasam
By Steephen May 26, 2022 11:54 AM GMT
Report

எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக இருந்தாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, பொருளாதாரத்தை வலுப்படுத்திய பின்னரே கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்று வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.

எவரையும் குறித்து வைத்து திருத்தச் சட்டங்களை கொண்டு வரக் கூடாது

குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்து நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவும் ஜனாதிபதியாக பதவிக்கு வருவதை தடுப்பதற்காகவும் அரசியலமைப்புத் திருத்தங்களை உருவாக்கக் கூடாது. இப்படியான நோக்கத்தை கொண்டு உலகில் எந்த நாடுகளும் அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வருவதில்லை.

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முன்னர் பொதுஜன பெரமுன அதனை ஆராய்ந்து, மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க, புதிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தது.

பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்து வருகிறது. முதலில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக வீதியில் செல்லவும் சிந்திக்கவும் சூழலை உருவாக்குங்கள்.

ரணில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணட்டும் பிறகு திருத்தச் சட்டங்கள் பற்றி பேசலாம் | 21 Amenment Ranil Economy Crisis

அப்போது நாம் அரசியலமைப்புத் திருத்தங்கள் பற்றி பேசலாம் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவது, அரச உயர் பதவிகளை வகிப்பது இரத்துச் செய்யப்பட்டது.

இதனையடுத்து 20வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு அதற்கான தடைகள் நீக்கப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்டுள்ள பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது கொண்டு வர உத்தேசித்துள்ள 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதை தடுக்கும் ஷரத்து உள்ளடக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த ஷரத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான வரைவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரணில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணட்டும் பிறகு திருத்தச் சட்டங்கள் பற்றி பேசலாம் | 21 Amenment Ranil Economy Crisis

21 வது திருத்தச் சட்டம் சர்வதேசத்தின் தலையீடு என்ற சந்தேகம்

இந்த நிலையில், 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஆரம்பம் மற்றும் அதன் குறிக்கோள் வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்வதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சாகர காரியவசம் கூறியுள்ளார்.

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு இறுதியில் ஆதரவளிக்க போவதில்லை எனக் கூற மாட்டோம். முதலில் நாட்டுக்காக சரியானதை செய்ய கலந்துரையாடக் கூடிய சூழலை ஏற்படுத்துவதே முதல் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கடந்த 23 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டதுடன் பின்னர் அதன் பிரதிகள் நேற்று நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US