டெல்லி தாக்குதல்... கைதான மருத்துவர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!
டெல்லி வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மருத்துவர் முஷம்மில் ஷகீல், இரண்டு மாதங்களுக்கு வெடிபொருட்களை சேமித்து வைப்பதற்காக வீடொன்றை வாடகைக்கு எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறைக்காக அவர் இந்திய மதிப்பில் 2,400 ரூபாயை வாடகையாக செலுத்தியுள்ளார்.
அதாவது, மாதத்திற்கு 1,200 ருபாய் என்ற அடிப்படையில், செப்டம்பர் 13 முதல் நவம்பர் 11 வரை இரண்டு மாதங்களுக்கு அறையை வாடகைக்கு எடுத்துள்ளார்.
மீட்கப்பட்ட பொருட்கள்
வாடகைக்கு எடுத்த வீட்டில் வெடிபொருட்களை வைத்துவிட்டு மீண்டும் அவர் அங்கு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த வீட்டிலிருந்து சுமார் 2,900 கிலோகிராம் அளவான அம்மோனியம் நைட்ரேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு இரசாயனம், ஒரு தாக்குதல் துப்பாக்கி மற்றும் ஒரு பெரிய ஆயுதக் கிடங்கும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri