யாழ். பொது நூலகத்தை நவீனமயமாக்க 100 மில்லியன் நிதி
யாழ்ப்பாணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்த 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Disanayaka) தெரிவித்துள்ளார்.
தீக்கிரையாக்கப்பட்டது...
2025ஆம் ஆண்டுக்கான ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட (Budget - 2025) முன்மொழிவின் கீழ், யாழ். பொது நூலகம் மற்றும் ஏனைய பிராந்திய நூலகங்களின் மேம்பாட்டில் இது முன்வைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக நூலகம் ஒன்று தீவைக்கப்பட்டது. அதன் வடு இன்னும் அந்த மக்களின் மனதில் இருக்கின்றது. அதற்கு நாங்கள் நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனவே, அந்த பொதுநூலகத்தினை நவீன மயப்படுத்தவும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam