தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்!

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Viswalingam Manivannan Budget 2025
By Sajithra Mar 10, 2025 09:13 AM GMT
Report

2025ஆம் ஆண்டு பாதீட்டின் படி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இம்முறையும் ஏமாற்றத்தையே சந்தித்துள்ளார்கள் என முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

ஐபிசி ஊடகத்தின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. 

மாதம்பே கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது

மாதம்பே கோர விபத்தில் பலியானவர்களின் விபரம் வெளியானது

வடக்கு - கிழக்கு மக்கள் 

இந்நிலையில், இந்த பாதீட்டை பொறுத்தவரையில், தமிழர் தரப்பை பொறுத்த வரையில் பல்வேறு விடயங்கள் கேள்விக்குறியாகவே உள்ளன என்று விசுவலிங்கம் மணிவண்ணன் கூறியுள்ளார். 

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்! | 2025 Budget For Defense Force Tamils Dissapointed

மேலும் அவர், "இலங்கையினுடைய பாதுகாப்பு படைக்கான ஒதுக்கீடு இம்முறையும் மிக அதிகமாக தான் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் பாதுகாப்பு படையை அதிக செறிவாக வைத்திருக்கின்ற இடமாக வடக்கு - கிழக்கு காணப்படுகின்றது. அதேவேளை. இங்கே அவர்கள் குறித்து குற்றச்சாட்டும் ஒன்று இருக்கின்றது. 

வடக்கு - கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு போதைப்பொருள் கடத்தல்களோடு தொடர்பு இருக்கின்றது என்ற குற்றச்சாட்டும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது. 

உள்நாட்டு யுத்தம் 

இந்நிலையில், படைத்தரப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்கள் இம்முறையும் ஏமாற்றத்தை தான் எதிர்நோக்கியுள்ளார்கள். 

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்! | 2025 Budget For Defense Force Tamils Dissapointed

30 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தத்திலே, மிகக் கொடூரமாக அழிக்கப்பட்ட தேசமாக வடக்கு - கிழக்கு இருக்கின்றது. 

எனவே, அதனை ஒரு சிறப்பு பிரதேசமாக அங்கீகரித்து, பொருளாதார உட்கட்டமைப்புக்களை மேம்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகின்றது. 

யாழ். மாநகர சபை என்பது வடக்கு - கிழக்கிலே இருக்கக் கூடிய பிரதான உள்ளூராட்சி மன்றம். அதற்குரிய கட்டடம் இடிக்கப்பட்டு, சிதைவடிக்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. 

நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ். மாநகர சபை 

இன்றும் அந்த மாநகர சபை ஒரு தற்காலிக இடத்திலேயே இருந்து கொண்டு இருக்கின்றது. அதேவேளை, அதனுடைய கட்டிட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடை நடுவே இழுத்துக் கொண்டு இருக்கின்றது. 

தமிழர் பகுதியில் குவிந்துள்ள பாதுகாப்பு படை: இம்முறையும் ஏமாற்றத்தில் மக்கள்! | 2025 Budget For Defense Force Tamils Dissapointed

எனவே, இவ்வாறான நிலையிலே வடக்கு - கிழக்கிற்கான நிதி ஒதுக்கீடு என்பது மிக அதிகமாக இருந்திருக்கப்பட வேண்டும். ஆனால், படைத்தரப்புக்கு தான் மிக அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. 

யுத்தம் நிறைவடைந்து ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இவ்வாறான ஒரு நிலையே நீடிக்கின்றது. ஆகவே, இந்த பாதீடு, தமிழ் மக்களுக்கு ஒரு பாரிய விமோசனத்தை தரும் என்பது எவராலும் பிரதிபலிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார். 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US