பலவீனமான அரசாங்கம், பொருளாதார மீட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில், இடதுசாரிப் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் தற்போதைய ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பலவீனமான அரசாங்கம், பொருளாதார மீட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் முடிவுடன் தேர்தலில் களம் இறங்குகிறது.
கடுமையான போட்டி நிலவும் தேர்தலில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாளை சனிக்கிழமை வாக்களிக்கிறார்கள்.
2022 இல் கடுமையான டொலர் பற்றாக்குறைக்குப் பிறகு சரிந்த பொருளாதாரம், வாக்காளர்களுக்கு முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
பசில் - நாமலின் பிள்ளைகள் நாட்டிலிருந்து வெளியேறிய செய்தி! மொட்டு கட்சி வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
எதிர்கால அரசியல்
எனினும், இந்த ஆண்டு முதல் முறையாக உள்நாட்டு பொருளாதாரம் வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளதுடன் மில்லியன் கணக்கானவர்கள் வறுமை மற்றும் கடனில் மூழ்கி உள்ளனர்.

இருப்பினும், நம்பிக்கைகளுடன் தங்கள் அடுத்த தலைவரை, அவர்கள் தெரிவு செய்யவுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கையர்கள் இன்னும் சிரமப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தல் பதற்றமானதாகவும், நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை அமைப்பதில் முக்கியமானதாகவும் இருக்கும் என உறுதியளிக்கிறது என்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கைக்கான மூத்த ஆலோசகர் அலன் கீனன் ரோயட்டரிடம் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri