உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு மூலம் ஏற்படும் குழப்பம்: கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம்
உயர்தரப் பரீட்சை(2023) ஒத்திவைக்கப்படுவதனால் சாதாரணதரப் பரீட்சைகள் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடத்திட்டத்தின் நிறைவு பாதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர உள்ளிட்ட அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ் விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார்.
பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்

மேலும், உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்வுகளை மீண்டும் எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இது நியாயமற்றது எனவும் மீண்டும் மீண்டும் வரும் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் நேரம் போதுமானதாக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri