இலங்கையை மிகவும் பின்னடைய செய்த 2021 - விசேட மீள்பார்வை தொகுப்பு (VIDEO)
2021ஆம் ஆண்டை பொறுத்தவரையில் உலகின் குறிப்பாக அனைத்து நாடுகளும் அரசியலில், பொருளாதாரத்தில் பின்னடைவையே கண்டன.
எனினும் இலங்கையை பொறுத்த வரையில் 2021ஆம் ஆண்டு மிகவும் பின்னடைவைக் கண்ட ஆண்டு என்று குறிப்பிடலாம்.
இந்த பின்னடைவு காரணமாக இலங்கை 2022 இல் கவனமாக காலடி எடுத்து வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் பொருளாரத்துக்கு அப்பால் 2021இல் இடம்பெற்று பொதுவான நிகழ்வுகளை பார்க்கலாமா? 2021- ஜனவரி 1 - சுரங்கா உதரி இலங்கையின் முதல் பெண் காதுகேளாத செய்தியாளர் மற்றும் முதல் சைகை மொழி ஊடகவியலாளராகின்றார்.
ஜனவரி 8 - உள்நாட்டில் பயிர்ச்செய்கைகளின் இருப்பை அச்சுறுத்தும் சேனா கம்பளிப்பூச்சி நாட்டில் கண்டறியப்படுகின்றது.
ஜனவரி 12- நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக உயர் நீதிமன்றத்தால் 04 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜயளவா 28 -இந்திய அரசாங்கத்தால் அன்பளிக்கப்பட்ட Oxford-AstraZeneca கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது.
29ஆம் திகதி இலங்கையில் தடுப்பூசி செலுத்தல் ஆரம்பமாகின்றது.
மார்ச் 2 ஆம் திகதி மன்னார், இரணைதீவு கொரோனா இறப்புகளை அடக்கம் செய்யும் இடமாக அடையாளம் காணப்படுகின்றது.
மார்ச் 15 - பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இலங்கையில் புர்காவை தடை செய்யும் திட்டத்தை அறிவித்தார் ஏப்ரல் 5 - இலங்கைக்கான பாம் ஒயில் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிடுகின்றார்.
ஏப்ரல் 6, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முக்கியதாரியாக நௌஃபர் மௌலவி அடையாளம் காணப்படுகின்றார்.
ஏப்ரல் 24 - முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாத் பதியுதீன் ஆகியோர், உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளுக்கு காரணமான தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படுகின்றனர்.
மே 27 ம் திகதி-சிங்கப்பூரின் கொள்கலன் கப்பலான X-Press Pearl, இலங்கையின் கொழும்பு கடற்கரையில் தீப்பிடித்து,கடற்கரையில் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
ஜூன் 28 ஆம் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதியின் விசேட மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுகிறார்.
இலங்கையின் மூன்று சர்வதேச கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலகா, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது உயிர் குமிழியை மீறியமை கண்டுபிடிக்கப்பட்டு இலங்கை திருப்பி அனுப்பப்படுகின்றனா்.
31 ஜூலை 31 இல் அந்த மூவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒரு வருடத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
முன்னாள் அமைச்சர், மங்கள சமரவீர, ஆகஸ்ட் 11 அன்று கொரோனாவினால் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 24 அன்று 65 வயதில் மரணமானார். ஆகஸ்ட் 21இல் 209 இறப்புகளுடன் இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 8000 ஐத் தாண்டுகிறது.
ஆகஸ்ட் 28இல் ஆகக்கூடிய கொரோனா இறப்பு 212ஆக பதிவாகிறது. அக்டோபர் 3- இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருகுமார் நடேசன் ஆகியோரின் நிதி ஆவணங்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்களின் இரகசிய சொத்து மற்றும் பரிவர்த்தனைகள் அடங்கிய பண்டோரா ஆவணங்கள் மூலம் கசிந்தன.
அக்டோபர் 20- பெரும்போக விவசாயத்துக்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 100,000 லிட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது.
அக்டோபர் 21- 31 வயதான தாய் ஒருவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூன்று ஆண் குழந்தைகளையும், மூன்று பெண் குழந்தைகளையும் பெற்றெடுக்கிறார். இது இலங்கையில் முதல் முறையாக முதல் இடம்பெற்ற நிகழ்வாக கருதப்படுகின்றது.
அக்டோபர் 22- - கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில், கறுப்பு பூஞ்சை நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார்.செப்டம்பர் 26 இல் அவர் மரணமாகின்றார்.
நவம்பர் 21- முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் ரஞ்சன் மடுல்கல்ல 200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக செயற்பட்ட முதல் போட்டி நடுவர் ஆக அறிவிக்கப்படுகின்றார்.
நவம்பர் 24 அன்று நைஜீரியாவில் இருந்து திரும்பிய மாரவிலாவைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவருக்கு முதல் Omicron மாறுபாடு கண்டறியப்படுகின்றது.
பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்தகுமார மத நிந்தனை குற்றச்சாட்டின்போில் அடித்து கொலை செய்யப்படுகின்றார்.
டிசம்பர் 25ஆம் திகதி திருக்கோவில் காவல் நிலையத்திற்குள் காவல்துறை உறுப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri