மத்திய கிழக்கில் சூழ்ந்துள்ள போர் மேகம்! நாடு திரும்பிய 20,000 அமெரிக்கர்கள்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பெப்ரவரி 28 முதல் இதுவரை சுமார் 20,000 அமெரிக்கக் குடிமக்கள் ஈரானில் இருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் அமெரிக்காவிற்குத் திரும்பியுள்ளனர்.
மேலும் பல அமெரிக்கர்கள் மூன்றாம் நாடுகள் வழியாகத் தாயகம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசு அறிவுறுத்தல்
மத்திய கிழக்கின் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு அந்தநாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த வெளியேற்ற நடவடிக்கைகளுக்காக சிறப்பு விமானங்கள் மற்றும் தரைவழிப் போக்குவரத்து வசதிகளை அமெரிக்கா முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும், இந்த வெளியேற்ற செயல்முறை குறித்து போதிய தெளிவு இல்லை எனச் சில தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.
உலக நாடுகள் பெரும் அதிர்ச்சி
கடந்த சனிக்கிழமை முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தொடர் குண்டுவீச்சுகளில் இதுவரை 1,230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில், தற்போது தெஹ்ரானில் மீண்டும் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டு வருவது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
அதேசமயம், லெபனான் மீதும் இஸ்ரேலியப் படைகள் தங்களது தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam