இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுத்திக்கு முன்னேறியது இந்தியா..
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்திய அணி
கொல்கத்தாவில் நேற்று(4) நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதியது.
இந்தநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று(5) நடைபெற்றது.

இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இநடதபோட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சிவம் துபே 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்தார்.
கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 7 பந்துகளில் 21 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 26ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 253 ஓட்டங்களை குவித்தது.
இங்கிலாந்து அணி
இதையடுத்து 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் இங்கிலாந்து அணியில் பில் சால்ட் 5 ஓட்டங்கள் , ஹாரி புரூக் 7 ஓட்டங்கள் , பட்லர் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். மறுபுறம் வில் ஜேக்ஸ் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். ஜேக்ஸ் 35 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து நிலைத்து ஆடிய பெத்தேல் சதமடித்தார். கடைசி வரை போராடிய அவர் 105 ஓட்டங்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 246 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வரும் 8ம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam