கடமையில் அலட்சியம் காட்டிய இரண்டு பொலிஸார் தற்காலிக பணிநீக்கம்
கடமையின் போது அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பொலிஸார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ம் திகதி அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிரபல போதைப் பொருள் வர்த்தகரான சமன் கொல்லா என்றழைக்கப்படும் சமன் பிரியங்கரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணை
அதன் போது பிரதேசவாசிகள் சம்பவம் குறித்த தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ள போதும், அன்றைய தினம் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி மற்றும் கணனி இயக்குநர்களாக செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த தகவலை நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்கத் தவறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 8 மணி நேரம் முன்
ஹார்முஸ் நீரிணையில் புதிய சேவை கட்டணம்: நட்பு நாடுகளுக்கு சிறப்பு சலுகை வழங்கும் ஈரான் News Lankasri
பிரித்தானியாவில் காணாமல் போன 2 இளைஞர்கள்: காரில் சடலமாக மீட்பு: பொலிஸார் வழங்கிய தகவல் News Lankasri