இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கான புதிய முன்மொழிவு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய போர்நிறுத்த முன்மொழிவை எகிப்து மற்றும் கத்தாரில் உள்ள மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸ் போர் நிறுத்தத்தை முன்மொழிவது இது நான்காவது முறையாகும் என்று சர்வதேகச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இஸ்லாமிய ரமலான் நோன்புப் பருவத்திற்கு மனிதாபிமான உதவிகள் அதிகளவில் தேவைப்படுவதாகவும், தெற்கு காசா பகுதியில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

திட்டமிட்ட தாக்குதல்
மேலும் இந்த தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என காசா சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 31,341 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 73,134 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அமைச்சு மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு