வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது : விசாரணையில் பகீர் தகவல்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் 500,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் 2 காலை கைது செய்யப்பட்டனர்.
கட்டநாயக்க பொலிஸ் அதிகாரிகள் குழு 2 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து 35 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கண்டுபிடித்துள்ளது.
கடவுச்சீட்டுகள் உயிரிழந்த பெண்கள், துறவிகள், மாணவர்கள் மற்றும் காலாவதியான மற்றும் செல்லாத கடவுச்சீட்டுகளாகும். இந்த மதுபான மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபருக்கு சொந்தமான 06 கடவுச்சீட்டுகளும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தீர்வை வரி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வை வரியற்ற வணிக வளாகத்தில் இருந்து இந்த வெளிநாட்டு மதுபானங்களை பெற அவர் இந்த கடவுச்சீட்டுகளை பயன்படுத்தியுள்ளார்.
மேலும் அதன் ஒரு பகுதி மற்றொரு வாகனத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவை விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால், கட்டுநாயக்க பொலிஸாரால் 30 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடம் இருந்து 147,000 ரூபாய் உள்ளூர் நாணயமும் 1,376 அமெரிக்க டொலர்களும் கைப்பற்றப்பட்டன.
மதுபான கடத்தல்
கைது செய்யப்பட்ட பிரதான கடத்தல்காரர் வத்தளையை சேர்ந்த 40 வயதுடையவர், மற்றொரு நபர் தியதலாவை சேர்ந்த 22 வயதுடையவராகும்.
22 வயதுடைய இரண்டாவது சந்தேக நபர் மாதத்திற்கு சுமார் 15 முறை விமான பயணத்தில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பிரதான கடத்தல்காரர் சுமார் 20 ஆண்டுகளாக இந்த மதுபானக் கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 2 பேரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam
