மதுபானம் அருந்திய இருவர் மரணம் - உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்
காலி, பிட்டிகல பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பிட்டிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரக்கொடை பகுதியில் வசிக்கும் பத்மகுமார என்ற நபரே தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபான போத்தல் ஒன்றை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த மதுபானத்தை தனது நண்பர்களும் சேர்ந்து அருந்தியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
நேற்று காலை வேளையில் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் உடனடியாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் 76 வயதான ஹரிசன் விஜேரத்ன மற்றும் 60 வயதான தர்மபால ஆகிய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருவரும் அதே பகுதியில் வசிப்பவர்கள் எனவும் விவசாயம் மற்றும் சாரதிகளாக தொழில் செய்து வருவதும் பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுபான போத்தல்
மதுபான போத்தலை கொண்டு வந்த நபரும் மற்றைய நபரும் எல்பிட்டிய மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri