வவுனியாவில் வாள்வெட்டு தாக்குதல்! இருவர் காயம்
வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நேற்று (07.03) காலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை வான் ஒன்றில் வந்த நபர்கள் வழிமறித்து வாளால் தாக்கியுள்ளனர்.
விசாரணை
இதனையடுத்து குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதேவேளை குறித்த நபர்களை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு