கொழும்பில் கொத்து மற்றும் பிரியாணி சாப்பிடுவோருக்கு அதிர்ச்சி தகவல்
கொழும்பில் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொத்து மற்றும் பிரியாணி விற்பனை செய்த கடைகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இரண்டு கடைகளுக்கு எதிராக பொது சுகாதார ஆய்வாளர்கள் நேற்று முன்தினம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ராஜகிரிய, கோட்டை வீதியில் நடத்தப்படும் மிஸ்டர் கொத்து கிராண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மாலிதுவ துரகே தினேஷ் பிரியகாந்த மற்றும் கோட்டை ராஜகிரிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர பகுதியில் பிக் பைட் பிரியாணி என்ற நிறுவனத்தை நடத்தி வரும் யோகநாதன் பிரசான் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
தனித்தனியாக வழக்கு
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை நகரசபை பொது சுகாதாரத் துறையின் பொது சுகாதார ஆய்வாளர் எச். ஏ. எல். ஆர். கருணாரத்ன, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தார்.
உணவு தயாரிப்பதற்கு அசுத்தமான பாத்திரங்களை பயன்படுத்துதல், உணவு பரிமாறும் பகுதியின் சுவர்கள் மற்றும் தரையை அழுக்கான நிலையில் பராமரித்தல், குப்பைகள் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கொள்கலன்களின் மூடிகளை மூடாமல் இருத்தல், உணவு பரிமாறும் பகுதிக்கு மேலே உள்ள மின்விளக்குகள் உடைந்தால் உணவில் சேராமல் தடுக்க அவற்றை மூடாமல் இருத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் 2 நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொத்து மற்றும் பிரியாணி
பொது சுகாதார ஆய்வாளர், கொத்து கிராண்ட் மீது 8 குற்றச்சாட்டுகளின் கீழும், பிக் பைட் பிரியாணி மீது 6 குற்றச்சாட்டுகளின் கீழும் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்குகள் கொழும்பு கூடுதல் நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன் விசாரிக்கப்பட உள்ளன.
you may like this





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
