நோயாளர் காவுகை வண்டி சேவை இடைநிறுத்தம்:மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச நோயாளர் காவுகை வண்டி சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்களை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த அவசர நோயாளர் காவுகை வண்டியானது(1990) நிறுத்தி வைக்கப்படுவதாகவும் பிரதானமாக ஏ9 வீதியில் இடம்பெறும் விபத்துக்களின் போது போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு அவசர சேவையை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பிரச்சினை
இந்த இலவச நோயாளர் காவுகை வண்டி பாண்டியகுளம், நட்டாங்கண்டல் மல்லாவி,கோட்டை கட்டிய குளம், அம்பலபெருமாள்,அம்பகாமம் தட்சடம்பன் ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கும் இந்துபுரம், வசந்தபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கும் நாளாந்தம் சேவையை வழங்கி வருகின்றது.
தற்போது மூன்று மாதங்களாக இந்த இலவச நோயாளர் காவுகை வண்டிசேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள் தள்ளப்பட்டுள்னர்.
குறிப்பாக நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளில் இருந்து நோயாளர்கள் சுமார் 3000 ரூபாய் வரையில் முச்சக்கரவண்டிக்கு செலவழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
முன்வைத்துள்ள கோரிக்கை
இந்த நோயாளர் காவுகை வண்டி சேவையை மீண்டும் மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை, மணலாறு பகுதிகளின் 1990 இலவச நோயாளர் காவுகை வண்டி சேவைகள் மாதக் கணக்காக திருத்த பணிகளில் உள்ளதாகவும் இவற்றை விரைவாக நிறைவு செய்து சேவையில் ஈடுபடுத்தும் வகையில் உரிய தரப்பின் கவனமெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
