முரண்பாடு காரணமாக காதலனை கொடூரமாக கொலை செய்த பெண்
மொனராகலை - வெல்லவாய பகுதியில் 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் தனது 31 வயதுடைய காதலனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
உயிரிழந்த நபர், நாவலப்பிட்டியைச் சேர்ந்த திருமணமானவர் என்பதுடன் 19 வயதுடைய இளம் பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அவருடன் சேர்ந்து வசித்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தப்பெண் நபரை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதன்போது, தாக்குதலுக்குள்ளான நிலையில் நபர், வெல்லவாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri