இலங்கையில் சடுதியாக அதிகரித்த கோவிட் மரணங்கள்!
இலங்கையில் மேலும் 19 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்று மொத்தமாக 2,456 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 145, 202 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 119,629 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 24,611 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 1,315,257 பேருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 269,512 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.