எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் 21 பேர் கைது
யாழ்ப்பாணம் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் இரு படகுகளில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட வேளையே இன்று (17) அதிகாலை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தல்
அதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள், இன்று கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம்
ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |