வவுனியா - ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கிடாச்சூரி, கோதண்டர் நொச்சிக்குளம் ஆகிய இரு கிராமங்களில் 2 கோவிட் சமூகத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களுடன் தொடர்பைப் பேணிய 19 குடும்பங்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே இவ்விரு தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அத்துடன், இவர்களில் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் 40 நாட்களாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவராவார்.
குறித்த நபரைப்
பார்வையிடுவதற்காகச் சென்ற நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam